Hometop 10 kavithai குட்டி குட்டி கவிதைகள் byவருண் மகிழன் -June 17, 2021 0 சில நேரங்களில்சில நேரங்களில்அனுமானங்கள்அனுபவமாகஅவதரிக்கிறது ...சில நேரங்களில்அனுமானங்கள்அவமானங்களாய்அவதரிக்கிறது ...சில நேரங்களின்இலக்கணம் புரியாமல்பல நேரம்பலர்அனுமானங்களைகைவிட்டுகேட்பார் கைப்பிள்ளையாய் ....திருடன் தோப்புபதிவுகள் எல்லாம்நிஜங்களில்லை ..நிஜங்கள் எல்லாமேபதிவுகளாவதில்லை ..சில வக்கிரர்களின்வஞ்சனை வாசம்சில கோபக்காரர்களின்கோர முகச்சாயம்சில சூழ்நிலைக்காரர்களின்சூட்சம சூழ்நிலையியல்சில ஏமாற்றுக்காரர்களின்ஏகாதிபத்திய சித்தாந்தம்இப்படியேனும்பலதரப்பட்டகுளறுபடிகள்குப்பைத்தொட்டியாகவேபல வரலாறுகள்வலுவிழந்துவசைபாடப்படுவதற்குவாக்காக அமைந்தது விட்டது ...எதிர்கால தலைமுறையில்வரலாறுகள் மாற்றியெழுதப்படாதுமாறாகமாற்றி எழுதப்பட்டவைகளெல்லாம்வரலாறாக ஓங்கி நிற்கும் ....பொட்டல் காடுசெம்புழுதியிலஉருண்டு பிரண்டுசொம்புத்தண்ணியேசோறா உண்டுஉச்சி வெயிலிலஉஷ்ண உடம்பாகாலனியனியா காளையாய்காளையோடுமண்ணோடு மண்ணாகபோகும் மட்டும்வித விதைச்சுஅறுவடை செஞ்சுநெஞ்சுத்தண்ணி முட்டிநடையா நட நடந்துஅறுத்த கூலிக்கேதாலியருக்குற நேரத்திலும்எல்லோருக்கும்நல்ல சோறு போட்டநம்ம விவசாயி மக்கரேஷன் கடையிலேபுழுவிழுந்த புழுங்கல் அரிசி வாங்கஅடையாள அட்டை எடுத்து வந்துஅடையாளம் தெரியாம போகுறான் ...இழப்பின் கண்ணீர்என்னை மயானத்தில்மாடு மேய்க்க விட்டுவிட்டுகுடமுழுக்கு தீர்த்தத்தில்குளிக்கிறது உன் கூந்தல்என் நிழலும் போதையில் தள்ளாடஉன் உலகம் புது உறவில் கொண்டாடுதுதென்றல் ரசித்த என் ஜன்னல்புயலில் சிக்கி புலம்புகிறதுபூமியின் சுழற்சியே அறியாமல்உன் பூவிழியில் தொலைந்த என் நாட்கள்என் இதயக் குடுவையின் முழுப்பரப்பிலும்உன் நினைவுக்கு கூடுகள் மூச்சடைக்குதுகட்டுப்பாடின்றி உன்மேல் வைத்த அன்புஇன்று என் கட்டளைகளை காலால் உதைக்கிறதுநடைப்பிணமாக நான் நடக்கஅலங்காரங்களுடன் அங்கு ஆரவாரம் ஆர்ப்பறிக்குதுபிணமாகும் வரை இனி புலம்பல் தான் என் தாய் மொழியோ ?பகட்டுத்தனம்அதிகாரம் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கஅடக்குமுறையின் கைகள் ஓங்கி அடிக்கபணபலம் பாதாளம் வரை பாயஉழைப்பவனின் கால்கள்ஊனமுற்றுதான் கிடக்கும்பாடையில் போகும் போதும்மாற்று ஆடைக்கும் வழியில்லாமல் ...அனாதையான அனாதைகள்யாருக்கும்உபயோகம் இல்லாததாலோஇல்லைதேவை முடிந்த பின்தூக்கியெறியப்பட்டதாலோவேண்டாப்பொருளாய்"குப்பை " என்னும்பொது மொழியோடுதெருவெங்கும்சாக்கடையெங்கும்கேட்பாரற்றுகிழிந்துநைந்துகிடக்கும்எங்களை தீயிலிட்டுமீண்டும் எரித்துகாற்றோடு கலக்கையில்மூக்கை மூடிக்கொள்ளும்மூடர்கூடம்உங்களுக்குஎப்படி தெரியும்எங்களின் வலிகள் ......பூமித்தாயேஓலைச்சுவடியில்மட்டும்பல வரலாறுகள்மீசை முறுக்கிகம்பீரத்துடன்கட்டுண்டு கிடக்கஓலைச்சுவடியோஒளிந்து கிடக்கும்இடமறியாமலும்பரணியில் போட்டபழைய பொருளாகவும்நீண்ட நாள் புதையுண்டுமண்ணில் மட்கிப்போனபல கரையான்கள்பல முறை அரித்தும்சிதைந்து போய்சின்ன சின்னதுகள்களாககாற்றோடு காற்றாககலந்தும்கரைந்தும்கடந்தும்எங்கேயோ தொலைந்துவிடபல வர்ணங்கள் தீட்டப்பட்டும்ஆதி அணு அழிக்கப்பட்டும்தனக்கே தன்னையேஅடையாளம் அறியாதவாறுபல அச்சுகளிலும்பல அகழ்வாராய்ச்சிகளிலும்கிடைத்தும்கிடைக்காமலும்அனாதையாய்கைவிடப்பட்டஉன் முன்குடி மக்களின்மூடப்பட்டமறைக்கப்பட்டஉண்மைகள்உனக்கு தெரியுமா ?தெரிந்தும் மௌனமா ?பூமித்தாயே!!!நிழல் ஓவியம்சற்று முதிர்ந்த முகம்அதற்கேற்ற முகபாவனைநடுத்தர நிறம்ஆனால் மேல்தட்டு பாவனைஎங்கோ பார்த்த முகச்சாயல்பல நாள் கேட்ட குரல்வலையின் குரல்இவ்வுருவ நிழல்என்னுடன் நீண்ட நாள்பயணித்ததாக ஒரு அனுமானம்தயங்கி போய் கேட்டேன்நீங்க " ராஜு " தானே ....சொல்லு மச்சி எப்படி இருக்கஎன்ற பதில் தொனியில்...என் பள்ளிப்பருவ நட்புபல்லிளித்துக் கொண்டது ...மீள் கனாஅவள்பட்டாம்பூச்சி தேசத்தின் தேவதைமின்மினிகள் அவளுடன் ஏதோஉரையாடி செல்லும்...கட்டெறும்பும் சிற்றெறும்பும்அவள் கால் நகம் தேடி வரும் ...இலையுதிர் கால இலைகளெல்லாம்அவள் கூந்தலில் ஆசி பெரும் ...வர்ணக்கலவைகளெல்லாம்அவள் மருதாணி நிறம் முன்சற்று மங்களாகவே தெரியும் ...இப்படி கனவு முடிந்ததுநேற்று இரவின் கற்பும் தொலைந்தது ..ஆனால் அவளிட்டமுத்தத்தின் ஈரம் மட்டும்இன்னும் ஏனோ முணுமுணுத்துக்கொண்டேஇன்றைய இரவின் வாயிலைத் தேடுகிறது ...இதுவும் தானேநாம்சாதிக்க தேவைகனவுஆர்வம்இலக்குதிட்டமிடல்உழைப்புவிடாமுயற்சிஇது மட்டும் தான்என்றிருந்தேன் ...நாம் சாதிக்கஒரு சாதனையும் தேவைப்படுகிறது ....நிலவழகுகிணற்று நீரில்தன் முகம் பார்த்தநிலவுதன்னழகில் மயங்கிவெட்கத்தில்முகத்தைமூடிக் கொண்டது...நினைவுத் தீஎன் முனை உடைந்தபேனாவின் கிறுக்கல்கள்அவளின் நினைவுகளையேநித்தம் நித்தம் நிந்திக்கிறது ...பேறு காலத்தில்என் பேனாகவிதையாய்அவளையே பெற்றுடுக்கிறது ...அவளின் நினைவுத்துளிகள்என் பேனாவின் மைத்துளிகள் ...என் எழுத்தெல்லாம்அவளின் எதார்த்தங்களையேபதிவுசெய்கிறது ...எரிமலையாய் என்னையேஎரிக்கிறது ...கொழுந்துவிட்டெரியும்காட்டில்உயிருக்குப் போராடும்ஒற்றை மரமாய் நான் ...தெருவெல்லாம் தேவதைதிருவிழா செல்லஎன்தேவதை மறுத்துவிட்டாள்எனவே திருவிழாவேஎன்தேவதையைத் தேடி வந்துவிட்டது..முதல் கனவுஎன் கண்களின்சேமிப்புக் கிடங்கில்முழுவதுமாய் ஆக்கிரமித்துஎல்லாக் காட்சியிலும்நிழலாய் பின்னிருந்துஉன்னுருவையேமுன்னுருவமாய்நிலை நிறுத்தும்முழுநிலவே ...என் முதல் கனவே ! Tags: top 10 kavithai varun magizhan kavithaigal whatssapp status wishes கவிதை தமிழ் கவிதைகள் வருண் மகிழன் கவிதைகள் Facebook Twitter