ஏக்கங்களும்
எதிர்பார்ப்புகளும்
கை கோர்த்தே
நடக்கிறது
என்
காதலில் ...
விழி
மூடி
விழி
திறக்கும்
அச்சிறிய
கண்
சிமிட்டல்
நேரம்
கூட
உன்
உருவம் மறைய
என்
மனம் ஏற்க மறுக்கிறது ..
இதுவரை
யாரும்
கேட்டிரா
புதுவகை
இசை
என்
இதயத்துடிப்பில்
நிற்காமல்
இசைத்துக்கொண்டே
இருக்கிறது
…
காத்திருத்தல்
எனக்கு
பழகிப்போனது
இந்த
காதல் மட்டும் தான்
ஏனோ
இன்னும்
பிடிபடாமல்
பிடிவாதம்
பிடிக்கிறது
உன்
நினைவுத் தீயில்
என்
ஆயுளின் ஆன்மா
அமைதி இல்லாமல்
அலைமோதுகிறது
பொறுமைக்கும்
எல்லையுண்டு
இனியும்
என்னை காக்க வைக்காதே
புரிந்து
கொள்
இல்லையேல்
பிரிந்து
செல்
நித்தம்
என் நினைவில்
உன்னை
நிரப்பி
என்னை
பித்தனாக்குவதை
இத்துடன்
நிறுத்திக்கொள்...