அழகிய அசுரா !

 

அழகிய அசுரா!

 


என் உயிர்ப்பூவின் மகரந்தமே....



என் தெரு விளக்கின் மின்மினியே
என் ஜன்னல் கம்பி வழி நுழையும் காற்றே
என் மொட்டை மாடி ஒற்றை ரோஜாவே ...



என் தொலைந்த பாதையின் அடையாளமே
என் புதிய பாதையின் அனுகூலமே...


குழந்தையின் பால் மனமே
குதூகலிக்குது என் மனமே ...
ராட்டினத்தின் அச்சாணியே
என் நாற்கட்டியின் முற்பாதியே...



என் உயிர்ப்பூவின் மகரந்தமே....


கண்களினால் அழகை

எல்லோரும் கண்டுகொண்டிருக்க
அழகியலையே

கண்களாய் கொண்டவளே...



பூங்காவில் பூக்கும் புது மலரும்
உன் பாதத்தில் மிதிபட தவமிருக்கும்...


கவிதையின் பிறப்பிடமே
கற்பனைகளின் நினைவிடமே...
தேவதைகளின் தேவதையே
தேவமாதாவின் பூ விழியே...




என் உயிர்ப்பூவின் மகரந்தமே....

 

கருப்பு வெள்ளை பூக்களும்
உன் கண்களால் காணும் போது
வண்ண மலர்களாய் மகுடம் சூடுதே...
உன்னிதழ் தேன் குடிக்க
வண்ணத்து பூச்சிகள் படையெடுக்குதே...

 

என் உயிர்ப்பூவின் மகரந்தமே....!!

- வருண் மகிழன் - 

 

Post a Comment (0)
Previous Post Next Post